Thursday, February 01, 2007

கள்வெறி கொண்டு...

வடைக்கான மாவிடுகையில் தெறித்த
சுடும் எண்ணெய்
சுட்டவலியைப்
போக்கிடும் அருமருந்தாய்

இசைக்கும் வார்த்தைகளுக்கு
இடையேயான மௌனம்
வளர்த்தெடுக்கும்
மெல்லிய அன்பை

ரணம் மறைத்துக் கிடந்த
காயத்தின் மேல்பொறுக்கு
காய்ந்து விழ விழ
வடு மறைய மறைய

கள்வெறி கொண்டு கூத்திடும்
ஆர்ப்பரிக்கும் உள்ளம்
கனிந்த அமைதியில் திளைக்கும்
காயம் மறந்து காதலில் நனைந்து

0 Comments:

Post a Comment

<< Home