Wednesday, February 28, 2007

சொந்தம்...

எந்த ஜென்ம சொந்தம்
எழுதவியலா பந்தம்

பறித்துச் சென்றாயா கண்ணா
பறிகொடுத்தேனா உளமலரை

விட்டுச் சென்றாயா மனதை
விடைகொடுக்க மறுத்தேனா

தொலைந்ததும் பெற்றதும்
மாயையா மகிழ்வா

எக்கணம் நிகழும் சந்திப்பு
எழுதிச்செல்லும் விதியின் வசம்

0 Comments:

Post a Comment

<< Home