Saturday, February 24, 2007

நீங்கமாட்டேன்...

காணுமிடம் யாவும்
காணாவிடங்களிலும்
நிறைந்துள்ளாய் கண்ணா

நனவிலும் நீ
கனவிலும் நீயென
நீக்கமற நிறைந்ததேன் கண்ணா

மறைந்தும் தோன்றியும்
நீ காட்டும் ஜாலங்கள்
நெஞ்சில் புது கோலங்கள் தீட்டும்
வாழ்வதற்கான வேட்கையினை
வாரி வாரி வழங்கியபடி

நீள் வானமெங்கும்
நமதான களியாட்டம்
பொங்கிப் பெருகித் ததும்பும்
உலகையே வாழ்விக்க

வா வந்து கானமிசைத்திடு
வசந்தம் வசந்தமிழந்து
சோர்ந்து காத்திருக்கிறது
வசந்தம் சேர்ப்போம் நாம்
வசந்தத்துக்கு

0 Comments:

Post a Comment

<< Home