Saturday, February 17, 2007

காலம் வரையும் ஓவியம்...

வண்ணம் புதிதாய்
அளித்தாய்

கானகக் குயில்
கண்டுகொண்டது

வண்ணங்களை
வாரி வாரி தெளித்தாய்

கானகக் குயில்
கானமிசைத்தது

வண்ணங்கள் மறைய
அதிர்ந்த குயில்
கானம் மறந்து
வண்ணம் தேடித்தேடி
அலைந்து ஓய்ந்தது

வானவில்லாய்
ஒளிர்ந்தாய்
கானம் பிறந்தது
இசைத்த கணம் மறைந்தாய்

மஹாமௌனம் நிலவ
மறுபடி ஒளிர்ந்தாய்
வானவில்லாய்
நிறம் பிரியும் வண்ணங்களுடன்
குயிலும் இசைத்தது
இனித்தும்
சோககீதம் சுமந்தும்

வண்ணமும் இசையும்
இணைந்தும் நீங்கியும்
நீங்கியும் இணைந்தும்
இழையும் ஓவியத்தை
வேதனையோ வேட்கையோ அறியா
காலம் வரைந்து கொண்டிருக்கிறது
இன்னும் இன்னும் இயல்பாய்

0 Comments:

Post a Comment

<< Home