Friday, February 16, 2007

கல்லும் கரையுமோ...

எதையும் கருத்தில் கொள்ளாது
சிறப்பை மட்டுமே நாடும்
தேர்ந்த சிற்பியாய்
தொடர்ந்து
செதுக்குகிறாய்
தவமிருப்பதாய்

உளியின் பதிவில்
இல்லை வலி
செதுக்க செதுக்க
உதிரிகளும்
சிறுசிறு தூசுகளும்
உதிர்கின்றன தானாகவே
உயர்வடைகிறது சிற்பம்

உளியின் பிரிதல்
உலுக்கி எடுக்கிறது
உன்னதம் தேவையில்லை
உளியின் ஸ்பரிசம் போதும்

0 Comments:

Post a Comment

<< Home