Wednesday, February 14, 2007

யார்...

மனக்கோவிலில்
மறைந்து ஒளிரும்
சிற்பத்தை வடித்தது யார்

உயிரில் கலந்த
உறவாய் உள்ளத்தில்
இணைத்தது யார்

எழுத்தில் பதிய இயலா
எல்லையில்லா அன்பை
எடுத்தளித்தது யார்

எங்கே சென்றாலும்
உள்ளாடும் நினைவை
எங்கே ஒளித்து வைப்பது

அன்பில் விதைக்கப்பட்டது
அன்பாய் விளைந்தது

விதைத்தது யார்
உரமிட்டது யார்
நீரூற்றியது யார்
வேலி கட்டியது யார்
பாதுகாத்தது யார்
உழைத்தது யார்
விளைவித்தது யார்

0 Comments:

Post a Comment

<< Home