Friday, February 09, 2007

ஜெபிக்கும் காற்று...

அதிகாலை வானம் தன்னில்
அரைத்த பூசுமாவைப்
பூசிக்கொண்டது
ஆரஞ்சு, மஞ்சள், வெளிர் நீலமாய்
வர்ணங்களை
வாரித் தெளித்துக் கொண்டது

மௌனமாய்
இறகசைத்துச் செல்லும் பறவைகூட
உன் பெயரை
இசைத்துச் செல்கிறது

சில்லென்று
தீண்டியது தென்றல்
திரும்பினால் யாரும் இல்லாத
தீக்கணத்தில்
உன் தீண்டலை நினைவுபடுத்த

உழலும் மனதை
இறுகக் கட்டி
உன் பெயரில்
இணைத்து விட்டேன்

மேகங்கள்
உன்நினைவைத்
துரத்திச் செல்ல

வானமெங்கும்
உன் பெயரினை
ஜெபித்துச் செல்கிறது காற்று

0 Comments:

Post a Comment

<< Home