Wednesday, February 07, 2007

தென்றலாய்...

மூச்சடைக்க
வியர்த்துக் கிடந்த பொழுது
சாத்தியிருந்த சாளரம்
சற்றே திறந்து
தென்றலாய் உள்நுழைந்தாய்

ஒரு பார்வையில்
உயிர்ப் பூவைப் பறித்தெடுத்தாய்
தவித்துக் கிடப்பதறிந்து
தண்மையாய் சாமரம் வீசினாய்

காற்றிற்கிசைந்த
பூவின் அசைவினை
நீ அறியாய்
என்ன தவம் செய்தேனோ
அறிந்து கொண்டேன் நான்

0 Comments:

Post a Comment

<< Home