Monday, February 05, 2007

நீ...

எங்கே சென்றாய் நீ
தேடிக் களைக்கின்றன விழிகள்

அறிவேன்
எப்போதும்
என்னுடன் இருக்கிறாய்
அறிந்தும்
தொடரும் தேடல்

புதுராகமெடுத்து
கானமிசைத்துச் செல்லும்
வானம்பாடி நீ
செல்லும் திசை தேடி
விரிகின்றன சிறகுகள்

இணைய இயலா ககனத்தில்
வெவ்வேறு திசைகளில்
விரும்பிய தேடலில்
பயணம் தொடர்கிறது

உன்மத்தம் விடுத்து
உன்கூடு சேர்வாய் நீ

களைத்தும்
என்கூடு சேர்வேனா
காணவியலா சோர்வில்
ககனத்தில் மாள்வேனா

0 Comments:

Post a Comment

<< Home