Saturday, February 03, 2007

எங்கிருந்தோ ஒரு குரல்...

எங்கிருந்தோ மௌனமாய்
ஒருகுரல்
இசைத்துக்கொண்டே இருக்கிறது

வேறு இலக்கேதுமின்றி
அதைத் தேடியே
அலைந்து கொண்டிருக்கிறேன்

இங்கே
அங்கே
எங்கேயென்று
தேடிச் செல்லச் செல்ல

வேறு வேறு கானங்களை
இசைத்த வண்ணம்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
எங்கிருந்தோ அக்குரல்

உள்நின்றுழலும்
மனதைக் கட்ட இயலாது
உடன்பட்டு
ஓடிக்கொண்டே இருக்கிறேன்
உயிரை அழித்துக் கொள்ளும்
வேட்கையோடு

0 Comments:

Post a Comment

<< Home