Friday, February 02, 2007

உன் நினைவு...

பறவையின் விழியை மட்டுமே
பார்த்த பார்த்தனின் இலக்காய்
தவம் செய்வதாய் குறிவைத்து
தொலைவில் செல்லச் செல்ல
அருகில் அருகில் ஈர்க்கிறாய்

இருளை அழிக்கும் ஒளிச்சுடராய்
ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்
ஒளியின் தீடசண்யத்தில்
கரைந்து கொண்டிருக்கிறேன்
உருகும் மெழுகாய்

அணைந்த திரி பரப்ப
எழும்பும் புகையாய்
மேலெலும்பி
சுழன்று கொண்டிருக்கிறது
உன் நினைவு

0 Comments:

Post a Comment

<< Home