Saturday, February 03, 2007

அலைபாய்கிறது...

இரும்பாய் இறுகிக் கிடந்த
இதயத்தை
இயல்பாய் ஒரு சிறு காந்தமென
இழுத்துச் சேர்த்துக் கொண்டாய்

அகங்காரம்
அழிய அழிய
இன்னும் இன்னுமென்று
இங்கும் அங்கும்
அலைபாய்கிறது

எவ்வித திசையிலும்
மீள்தல்
சாத்தியமில்லா நிலையில்
இன்னுயிரை
அழித்துக் கொண்டபின்பே
இயல்புக்கு
மீள இயலும்

0 Comments:

Post a Comment

<< Home