Saturday, February 03, 2007

தேடித் தேடி...

அய்ம்புலன்களும்
கட்டப்பட்ட நிலையில்
அன்புப் பேரொளியெனும்
பிரகாசம் நாடி
வீழ்ந்து விடத்துடிக்கும்
விட்டில் பூச்சியாய்
விரைகிறது மாறிமாறி பரிமாணம்

ஒளி ஓளிரும்போதும்
ஒளியின் சுடர்விலகும்போதும்
அதைத் தேடித் தேடியே
களைத்துக் கிடக்கும்

ஒளிச்சுடர் என்றும் அறியாது
ஒளியையே உண்டு
விழுங்கி விடத் துடிக்கும்
விட்டிலின் வேட்கையினை

0 Comments:

Post a Comment

<< Home