Saturday, February 03, 2007

அன்புப் பிரவாகம்...

இயந்திர உலகில்
இசைவாய் உன்
அயர்வைப் போக்கிடவே
அனுதினமும் விளைகிறேன்

சென்ற இடம் அறியாது
சிந்தை கலங்கிட
உன்னைத் தேடுகையில்
கட்டுக்குள்
இருக்க விரும்பும் மனம்
கட்டுகளை உடைத்தெறிந்து
உனைத்தேடி வருவதை
நீ அறிந்திடாய் என்றும்

அன்புப் பிரவாகம்
உன்னை அழித்துவிடாது
காத்திடவே துடிக்கிறேன்
என்னையும் நீ காத்திடுவாய்
எனும் நம்பிக்கையே
இன்னும் வாழச் சொல்லி
உயிர்ப்பிக்கிறது

0 Comments:

Post a Comment

<< Home