Sunday, February 04, 2007

கடந்த பாதை...

கடந்து வந்த பாதை
கடந்து திரும்பும்
அதே பயணம்
சாத்தியமா

நதியின் பிரவாகம் திரும்பி
ஊற்றுக்கண் சேரவியலாது
சென்று சேரும் இடம்
நதியின் ஓட்டம் மீறியது

ஓடி ஓடிக் களைத்து
சேரும் இடம்
விதியின் கைகளில்

நதி ஓடியே ஆக வேண்டும்
தன்னிச்சையுடனும்
தன்னிச்சை கடந்தும்
இயற்கையின் அழகையும்
இயல்பாய் நிகழும் விஷயங்களையும்
அணைத்தெடுத்துக் கொண்டு

0 Comments:

Post a Comment

<< Home