Wednesday, February 07, 2007

கிளை-பறவை...

மரம் அங்கேயே
காத்துக் கிடக்கும்

இளைப்பாற
வந்த பறவை
கிளையில் அமர்ந்தது
களைப்பாறியது
பறக்க யத்தனித்தது

காற்று, பறவை, இலை, பூ
எத்தனையோ கிளையில்
அமரும், கடக்கும் என்பதை
அறிந்த கிளைதான்

அந்தப்பறவையின்
அசைவில்
பயணம் தொடரும்
அசைவில்
அதிர்ந்து கிடந்தது கிளை

ஆஆவென
ஆர்ப்பரிக்கும் கிளை
காற்றின் வீச்சில்
நிறுத்த இயலுமோ
பறவையின் பயணத்தை

கிளை என்ன செய்யும்
அந்தப் பறவைக்கும்
கிளைக்குமான உறவு என்ன
பறவையை எப்படி
நிறுத்த இயலும் மரக்கிளையால்

மரம் அங்கேயே
காத்துக் கிடக்கும்

0 Comments:

Post a Comment

<< Home