Wednesday, February 14, 2007

உன் நினைவைப் பற்றிக் கொண்டு...

மௌனமாய் அதட்டியும்
உபயோகமில்லை

விழியசைவில் தடுத்தும்
வியர்த்தமே

எந்த போதனையாலும்
பயனில்லை

சற்றும் வெட்கமின்றி
விடமறுக்கிறது

மனதின் ஓசை
ஓயவில்லை

அமைதியான வேளையிலும்
அதிர அதிரத் தீண்டுகிறது

பிறந்த குழந்தையின்
நிணமும், ரணமும்
பூசிய புத்தம்புது மேனியாய்
உயிர்ப்புடன்
கதறிக்கொண்டிருக்கிறது
விழிதிறவாது
உன் நினைவைப்
பற்றிக் கொண்டு

0 Comments:

Post a Comment

<< Home