Monday, February 19, 2007

நீள்கின்றது...

நீள்கின்றது நாழிகை
நீ இல்லா பொழுதெல்லாம்
கோடையின் நீள்பகலாய்

உன் அருகாமை
உன்மத்தமாகும் உள்ளம்
உயிரளிக்கும்
வசந்தத்தின் விளைவாய்

உண்மை சுடும்
உன் இல்லாதிருப்பை உணர்த்தி
மீட்சியில்லை இனி

நீ இல்லா பொழுதிலும்
வாழ்ந்துதான் ஆகணும்
உன் நினைவினைச் சுமந்து கொண்டு
உன் அருகாமையை உணர்ந்தபடி
காற்றில் மிதக்கும் விழிகளுடன்

0 Comments:

Post a Comment

<< Home