Friday, February 23, 2007

ஒற்றைச் சாளரமும் மூடிக் கொண்ட பொழுது...

எல்லா கதவுகளும்
அடைக்கப்பட்டு மூச்சுமுட்ட
அடைபட்டுக் கிடந்த பொழுது

திறந்த ஒற்றைச் சாளரமும்
திறந்தது மூடிக்கொள்ளவே என
சாத்திக்கொண்ட பொழுது

சாளரம் வழி கண்ட
புது உலகின்
காட்சியும் கானமும்
நினைந்து நினைந்து
கடைசி மூச்சாய்
பிடித்துக் கொண்டு
கரைசேர்ந்திடும் துடிப்பில்
உயிர் துடிதுடித்துக் கிடக்கும்

தப்பித்துவிடும் துடிப்பில்
கதவின் இடுக்கில் அகப்பட்டு
நைந்து போன
கரப்பான் பூச்சியின் தவிப்பாய்

0 Comments:

Post a Comment

<< Home