Thursday, July 26, 2007

உன் காதலறிந்த கணம்...

மறந்தாகிவிட்டதென்று
வார்த்தை ஜாலத்தில்
மறுபடி மறுபடி
மறந்ததாய் காட்டிக் கொள்வாய்

மறக்கவியலாதென அறிந்தாலும்
தவிப்பில் அமிழ்ந்து
தேடலில் தொலைந்து
பரிதவிக்கும் கணத்தில்
மீண்டும் காரணம் காரியம்
சொல்வாய்
காத்திருக்க வைத்ததற்காய்

புதிது புதிதாய்
முற்றிலும் புதிதாய்
ஒவ்வொரு முறையும்
உன் காதலை அறிந்தகணமும்
புதுமலர் பூக்கும் புதிதாய் எனக்குள்
புத்தம் புதிதாய்
எனைப் பார்த்ததும்
மலரும் உன் மதிமுகம் போல்

2 Comments:

Blogger PKS said...

Nalla Kavithai. - PK Sivakumar

Friday, July 27, 2007 1:40:00 PM  
Blogger மதுமிதா said...

நல்ல ரசிகர்:-)
நன்றி

Friday, July 27, 2007 8:21:00 PM  

Post a Comment

<< Home