Friday, March 09, 2007

வெல்வது எங்ஙனம்...

மனம் ததும்ப
தழுதழுக்கும் உணர்வுகளை
வெல்வது எங்ஙனம்

காரணத்தோடோ
காரணமின்றியோ
விளைவதல்லஅன்புப்பயிர்

நீரூற்றாமலே வளரும் அன்பை
நிறுத்துவது எப்படி
அன்பின் அலையால்
அடிக்கப்பட்டு
இழுத்துச் செல்லப்படும் உயிர்
எங்கே கரை சேரும்

எதிர்பாராமல் கிடைத்த அன்பின்
பேரொளியில் பேரானாந்தத்தில்
திளைக்கிறேன்

எதிர்பார்த்தே கிடைத்த அன்பின்
பேரொலியில்
இசைந்து கிடக்கிறேன்

அன்பின் வசமான மனம்
அனைத்தையும் மறந்து
அன்பில் திளைத்துக் கிடக்க
அன்பைப் பற்றியே நகர்கிறது
அமைதியாக வாழ்க்கைப் பயணம்
பற்றுக்கோலாய்

பனிமலையிடையே
பனிமழை பொழிய
குளிரில் நனைந்து
குளிரைப் போக்கிட
வெப்பம் உணர்ந்து

இணைந்த கரங்களின்
இசைந்த இசைவில்
இன்பம் நுகர்ந்து
உயிரில் கலந்து
உறையும் நாள்
உலகம் வியக்கும்
உண்மை அன்பை
உணர்ந்திட வந்திடுமோ
அத்திருநாள்
இனிய பொன்னாள்
மறக்க முடியுமா
கனவு நனவாவதை
நனவே கனவாகக் காட்டியதா

காலம்
இணைத்த இருமனங்கள்
எந்த முடிச்சுமுடிச்சிட்டது
நீங்காது இணைந்திட

0 Comments:

Post a Comment

<< Home