Thursday, July 26, 2007

அடம் பிடிக்கும் குழந்தை நீ...

கண்ணனின் லீலைகளாய்
மிஞ்சும் குழந்தையின் அடம்

கெஞ்சும் மிரட்டல்
கொஞ்சும் பாவனையில்

வஞ்சம் நிறையுலகில்
தஞ்சமடைந்தேன் உன்னை
பஞ்சாய் பற்றிக்கொண்டாய்

உன்னுயர் குணங்கள்
உன் பலவீனங்கள்
உன் சோதனைகள்
அனைத்தையும் கடந்து

நான் நானாக இருப்பேனென
அடம் பிடிக்கும் குழந்தையுனை
ஒதுங்கிச் சென்றாலும்
இழுத்து இறுக
அரவணைத்துக் கொண்டேன்
அன்பின் மிகுதியில்

ஆண்டுகள்
ஜென்மாந்தர தேடலுக்குப் பின்
அடங்கி என்னுள்
அமைதியின் சொரூபமானாய்

0 Comments:

Post a Comment

<< Home