Wednesday, March 28, 2007

உச்சரிப்பது உன் பெயரே...

நெஞ்சுன்னைத் தேடுகையில்
நினைவழிந்து கிடக்கையில்
நித்தம் முத்தம் பதிக்கையில்
உடனிருந்தும் உச்சரித்தும்
காப்பதுன் பெயரே

விதி இதுவோ
விதி செய்த சதி இதுவோ
மதி இழந்து கிடக்கையில்
மோகமயக்கத்தில் உழல்கையில்
மனம் அமைதியில் ஆழ்கையில்
உச்சரிப்பது உன் பெயரே

மாலை மருள்கையில் காக்குமோ
இருள் சூழ்கையில் காக்குமோ
மரணவாசல் வரை வந்து காக்குமோ
மனமும் உச்சரிக்கும் உன் பெயரே

0 Comments:

Post a Comment

<< Home