Thursday, March 29, 2007

அன்பை மீட்பாயா

எங்கே சென்றாலும்
என்னுடனே வருகின்றாய்
உன் பெயரை உச்சரிக்க
மாயமாய் மறைகின்றாய்

என்ன ஜாலமிது
என்ன வேதனை இது
அன்பின் பிடிக்குள்ளே
ஆவேசம் சேர்ந்திடுமோ

ஆவேசம் சேர்ந்துவிட்டால்
அணைத்துக் காப்பாயா
அணைத்து எடுக்கையிலே
அன்பைதான் மீட்பாயா

முத்தம் நீ கொடுக்க
முடியாமல் நான் தவிக்க
மார்போடு சேர்த்துக் கொண்டாய்
முழுமேனியும் நடுங்குதடா

வெட்கம் துடைத்திடவே
தாளாது நான் துடிக்க
மோகப் போர்வை சேர்த்து
மேனியாலே மூடிடுவாய்

0 Comments:

Post a Comment

<< Home