Sunday, July 29, 2007

இன்று பௌர்ணமிதான்...

தினமும் நடக்கும்
ஒருவழிப் பாதைதான்

முகிலின் மறைவில் நிலவோ
தெரிந்தும் தெரியாமலும்

இருபக்க மரங்கள்
இசைந்து வீசின
தென்றல் சாமரம்
மலர்களை மகிழ்வுடன்
மலரவைத்தபடி

வேப்பமர நறுமணம் பரவும்
வேறுமணங்களை விஞ்சியபடி

நடையின் நடுவே
நடையில்
இணைந்து செல்லும்
நினைவு
கனவினை மிஞ்சி

மலர்ந்த மென்னகையுடன்
காதலை வெளிப்படுத்தும்
குரலின் கனிவு
மறைக்க நினைத்த அன்பை
மயக்கத்தில் வெளிப்படுத்தியபடி

மேகம் கடந்து
உயரே எழும்பிய வெண்ணிலா
வானம் முழுக்க
வெண்ணொளியினை பரப்பி
வாரி அணைக்கிறது உலகை

இன்று பௌர்ணமிதான்.

0 Comments:

Post a Comment

<< Home