உனக்கான கீதம்.....
மலரும் பறவையும் உறங்கும்
வண்டுகளும் விலங்கும் உறங்கும்
உயிர்கள் மொத்தமும் உறங்கும் உலகு
உறங்கா உள்ளம் இசைக்கும்
தனியே
தன்னிச்சையாய்
கீதம்
உனக்கான கீதம்
கீதம் இசைந்து மிதக்கும்
உணர்வில்
உயிரில்
உலகில்
வெளியில்
மெய்யுருக
வார்த்தைகள் கடந்து
உனைத்தேடி
உனைத் தீண்ட
அசையும் கீதம்
உயிரில் இசைத்து
உன்னை இலக்காக்கி
உலகுக்களித்தேன்
களித்த உலகம்
கரகோஷமிட்டது
உன்னத கீதமென
0 Comments:
Post a Comment
<< Home