Thursday, April 05, 2007

கருத்தழிந்து போகிறேன்...

நினைவால் நிதம் தீண்டுகிறாய்
நித்தம் ஒரு கவிதை வேண்டுகிறாய்
உயிர்ப்பூவெடுத்து
வார்த்தைச் சரம் தொடுத்தளிக்கிறேன்
உன் மகிழ்வை வேண்டி

நிதம் அன்பால் நெருங்குகிறாய்
நித்தம் புத்தம் புதுநாளை பரிசளிக்கிறாய்
உயிரையளித்து உயிர் மீட்டெடுக்கிறாய்
என் மகிழ்வை நாடி

கண்டும் காணாமல்
மறைந்து ஆட்டம் காட்டுகிறாய்
காணாகாட்சியில் தொலைந்து
கருத்தழிந்து போகிறேன்

0 Comments:

Post a Comment

<< Home