Wednesday, August 15, 2007

அன்பில் கரைதல்...

அனல் பறக்கும் வேளையிலும்
ஆகக் குளிர்ந்த பொழுதுகளிலும்

எங்கும் உனைக்காண நினைக்கையில்
எதிலும் உனை உணரத்தவிக்கையில்
எதையும் உன்னுடன் பகிரத்துடிக்கையில்

என்றோ போடப்பட்ட
எல்லா கட்டுகளையும் கடந்து
அனைத்து தளைகளையும் உடைத்துக் கொண்டு

அன்பில் கரைதல்
நிகழ்ந்துவிடுகிறது தானாகவே

0 Comments:

Post a Comment

<< Home