Friday, September 07, 2007

நிரூபணத்திற்கான கேள்விகள்...

என்ன எழுதியும் நிறைவில்லை
எப்படி என்ன வார்த்தையில்
அன்பை வடிக்க இயலும்

ததும்பும் அன்பை
மறைத்தலுக்கான சிரமங்கள்
அன்பினும்
வலிய வலியினைத்தரும்
வல்லமைபெற்றவை

அறியாதவர்கள்
அறிந்து கொள்வதில்லை

கதிரவன் ஒளியை
காகிதத்தால் மறைத்துவிடுதல்போல்
மதியின் அழகை
மேகம் மறைப்பதுபோல்
அன்பை மறைக்கவியலாதென

நினைவிருக்கும்வரை
நிஜம் புரியும்வரை
தொடரும்தான்
நிரூபணத்திற்கான கேள்விகள்
இருப்புக்கான சாத்தியங்கள்
இல்லாததுபோல்

0 Comments:

Post a Comment

<< Home