Thursday, August 16, 2007

உனக்கே உனக்காய்...

உனக்கான மகிழ்வை
உனக்கே உனக்காய்

உளப்பூர்வமாய் அளித்திடும்
உணர்வு ஊற்றெடுக்கும்
உறங்க எத்தனிக்கையில்

உன் உறக்கக்குரலில்
பொங்கி வழியும்
பிரியத்தின் மலர்களை
வாடாமல் பாதுகாத்துவிடும் போதையில்
நிகழ்வது என்ன என்ன என்றறியா
நிலையிலும்

உறங்கித் தொலைத்துவிடும்
உத்வேகம் மலரும்
உனக்கான களைப்பைப் போக்கிட
உனக்கான மருந்தாய் மாறிவிட

யாரும் காணா நிலையிலும்
எவருமறியா ஏதோ ஓரிடத்திலும்
மலர்கள்
மலர்ந்து கொண்டுதானே இருக்கிறது

உருகும் உள்ளம்
உணராநிலையில்
உறக்கம் தொலைத்து
எங்கோ இருப்பாய்

உனக்கே உனக்காய்
மகிழ்வளிக்க வேண்டி
உனக்கான உறக்கம் தாங்கி
உறங்கித் தீர்க்க வேண்டும்

0 Comments:

Post a Comment

<< Home