Thursday, August 16, 2007

உறக்கம் தொலைத்த பொழுதில்...

உறக்கம் தொலைத்த பொழுதில்
ஓயாதெழும் உன் நினைவு
உன்மத்தமளித்தபடி

உன்மத்தம் கொண்ட மனம்
உனைவிடாது பற்றிக் கொள்ளும்
உடும்புப் பிடியாய்

பிடியை நழுவவிடாது
பிடிவாதமாய்
இறுகத்தீண்டும்
இணைந்தே இருக்க விரும்பும்
பித்துப் பிடித்த உணர்வில்

உணர்வின் கொந்தளிப்பில்
உனைக்காத்திடும் ஆவேசமும்
உறக்கமாய் உனைத்தீண்டும் பரிதவிப்பும் சேர
உணர்வாயோ இதே உணர்வை

உணர்ந்த உண்மையால்
உறங்கச் செய்கிறாய்
உன் நினைவால்
உயிர்ப்பிக்கிறாய்
உடன் சாமரம் வீசி

0 Comments:

Post a Comment

<< Home