Sunday, September 09, 2007

தெவிட்டாத உன் முன்னே...

தென்றலோ தேன்மலரோ
தரத் தவறுகிறது உன் சுவையை
தோல்வியில் தவழ்கிறது
தெவிட்டாத உன் முன்னே

திடீரென தென்படுகிறாய்
நீதானோ
விரைகின்றன விழிகள்
விரிய விரிய
நிலைகொள்கின்றன ஓரிடத்தில்

அடுத்தகணம் இல்லை
அங்கே தென்படவில்லை
அலைபாயும் விழிகள்
ஆறுதல் சொல்லி தேற்றுவாரின்றி

தேடிச் சென்ற மனமோ
திரும்பவில்லை இன்னும்
இறுகப் பற்றிக் கொண்டாயோ
கொள்ளை போனதை

0 Comments:

Post a Comment

<< Home