Thursday, September 20, 2007

மாசா மாசற்றதா...

பிரிவின்
ஒவ்வொரு நொடியிலும்
உரசிப் பார்க்கவியலுமோ
காதலை

உண்மைக் காதலாகுமோ
மாசா மாசற்றதாவென
பொன்னை உரசுவதாய்
உரசிப் பார்த்தால்

சிருங்காரம் சேர்த்து
சிங்காரமாய் அலங்கரித்து வரும்
சில்லெனும் இரவு
காதலை வளர்க்கவே

சலிப்பை கொடுக்கும்
சிறு பிரிவும் கூட

இணைவோ
இன்பம் வளர்க்கும்
நீங்கா இன்பம் சேர்க்கும்

0 Comments:

Post a Comment

<< Home