Thursday, October 11, 2007

வாச‌ம‌ல‌ராய் ம‌லர்ந்திருப்போமோ...

வருகிறேன் எனக்கூறி
எங்கேயோ சென்றுவிடுகிறாய்
அவஸ்தையை அறியாது
இதயத்தை வேரோடு பிடுங்கிக்கொண்டு

வரும் சேதியேனும் சொல்வாயோ
வாச‌ம‌ல‌ராய் ம‌லர்ந்திருப்போமோ

வருவாயோ
வருகையில் வாழ்ந்திருப்பேனோ
வாடிய‌ மலராய் மறைந்திருப்பேனோ

4 Comments:

Blogger cheena (சீனா) said...

//வாச‌ம‌ல‌ராய் ம‌லர்ந்திருப்போமோ
வாடிய‌ மலராய் மறைந்திருப்பேனோ//

பிரிவு என்பது தாங்க முடியாதது - இணையும் வரை இருப்பேனா - விரக்தியின் உச்சம்

வாசமலரா - வாடிய மலரா ?? நன்று நன்று

ரசித்தேன் மகிழ்ந்தேன்

Saturday, October 13, 2007 6:25:00 PM  
Blogger மதுமிதா said...

நல்ல ரசனை உங்களுக்கு சீனா

ரசித்துப் படித்திருக்கிறீகள் என்பது துல்லியமாகத் தெரிகிறது:-)

Monday, October 15, 2007 1:50:00 AM  
Blogger  வல்லிசிம்ஹன் said...

கண்ணன் வரும் நாள் கன்னியிருப்பாள்
காற்றில் மறைய மாட்டாள்.

ம்ம் சூப்பர்!!!!

Saturday, November 10, 2007 4:39:00 AM  
Blogger மதுமிதா said...

சூப்பர் வாழ்த்து வல்லிம்மா:-)

நன்றி நன்றி நன்றி!!!

Saturday, November 10, 2007 6:07:00 AM  

Post a Comment

<< Home