Saturday, October 13, 2007

நீள்கிறது இரவு...

நீள்கிறது இரவு
நீயின்றி சுடுகிறது தீயாய்

காயும் நில‌வும்
காற்றும்கூட‌ த‌கிக்கிற‌து
உன்நினைவினை
அலைய‌லையாய் எழுப்பி

க‌ட‌லினும் பெரிதோ
ம‌ல‌ரினும் அழ‌கோ
கானினும் அட‌ர்வோ
தேனினும் இனிதோ

தீண்டவேண்டுமெனும்
தீரா விருப்பினை
அள்ளி அள்ளி
அளிக்கும்காத‌ல்

Thursday, October 11, 2007

விழிகள் காத்திருக்கின்றன‌...

வீழ்வேனோ
வேர‌றுந்த‌ ம‌ர‌மாய்
உனைக் காணாது

விழியின் தீண்டலில்
உயிர்க்கும் வாழ்வென‌
விழிகள் காத்திருக்கின்றன‌
உயிரை இறுக‌ப்பற்றி

வாச‌ம‌ல‌ராய் ம‌லர்ந்திருப்போமோ...

வருகிறேன் எனக்கூறி
எங்கேயோ சென்றுவிடுகிறாய்
அவஸ்தையை அறியாது
இதயத்தை வேரோடு பிடுங்கிக்கொண்டு

வரும் சேதியேனும் சொல்வாயோ
வாச‌ம‌ல‌ராய் ம‌லர்ந்திருப்போமோ

வருவாயோ
வருகையில் வாழ்ந்திருப்பேனோ
வாடிய‌ மலராய் மறைந்திருப்பேனோ

Tuesday, October 09, 2007

இரயில் சிநேக‌ம் ...


இனிய சிநேக‌ம்
ஓர் நாளில் காதலாக‌லாம்

இனிய காதலும்
இரயில் சிநேகமாகிடுமோ

உயிரான உறவை...

தேடும் விழிகள் ஓயுமோ
உறவு செல்கையிலும்
உயிர் விலகுகையிலும்

உயிர் பிரிகையிலேனும் காணுமோ
உயிரான உறவை
உறவான உயிரை